பாதாளக் குழு உறுப்பினரான ரத்மலானே ரொஹா என்ற ரோஹன டி சில்வா, இன்று அதிகாலை நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் இயந்திரப் படகு மூலம் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவரிடமிருந்து ரி - 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், ஒரு இலட்சம் இந்திய ரூபாவும் மீட்கப்பட்டுள்ளன.
படுகொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக உள்ளன.